Sunday 19th of May 2024 04:24:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
நைஜீரியாவில் ஓடும் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 5 பேர் பலி; 9 பேர் காயம்

நைஜீரியாவில் ஓடும் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 5 பேர் பலி; 9 பேர் காயம்


நைஜீரியாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் மூன்று மாநிலங்களை இணைக்கும் லாகோஸ்-இபாடான் நெடுஞ்சாலையில் நேற்று புதன்கிழமை பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் பேருந்துக்குள் இருந்த 5 பேர் தீயிர் கருகி பலியாகினர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

நெடுஞ்சாலையின் ஓகுன் நடைபாதையில் உள்ள ஓகெரே நகரில் தீ விபத்து இடம்பெற்றது.

பேருந்து ஓடிக்கொண்டு இருந்தபோது இயந்திரப் பகுதியில் இருந்து தீ பரவி, பேருந்து முழுவதும் வேகமாகப் பரவியதாக தெற்கு மாநிலமான ஓகுனில் உள்ள கூட்டாட்சி வீதி பாதுகாப்புப் படையின் கட்டளை அதிகாரி அகமது உமர் தெரிவித்தார்.

இறந்த 5 பேரின் உடல்களிலும் பலத்த தீ காயங்கள் உள்ளன. தீ பரவியதாலும், ஓடும் பேருந்தில் இருந்து குதித்தாலும் 9 பேர் காயமடைந்தனர் எனவும் அவர் கூறினார்.

ஓட்டுனர்கள் வாகனங்களை வெளியே எடுக்கும்போது, அது வீதியில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையிலும் மற்றும் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையிலும் சரியான தகுதி நிலையில் உள்ளதா? என்பதை அனைத்து நேரங்களிலும் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் ஓகுனில் உள்ள கூட்டாட்சி வீதி பாதுகாப்புப் படையின் கட்டளை அதிகாரி அகமது உமர் அறிவுறுத்தியுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE